Friday, June 11, 2010

இறைவனிடம் என்ன கேட்கணும்?

[ நன்றி குமுதத்திற்கு for this message...]

‘‘இறைவனிடம் இது வேண்டும்...அது வேண்டும் என வேண்டுவதை-விட, நீயாகவே எனக்குக் கொடு எனக் கேட்பதுதான் நல்லது...!’’

சொன்ன குருவிடம், ‘‘ஏன் அப்படி?’’ எனக் கேட்டான் ஒரு சீடன்.

‘‘ஒரு குழந்தை பாத்திரத்தில் இருந்து தின்பண்டத்தை எடுத்தால் அதன் கை கொள்ளும் அளவுதான் கிடைக்கும். பெரியவர் யாராவது எடுத்துத் தந்தால், அதிகமாகக் கிடைக்கும்.

அப்படித்தான்... இறைவனின் திருக்கரத்தால் தரப்படுவது, நீ கேட்பதைவிட அதிகமாகவே இருக்கும்!’’

குருவின் வார்த்தைகளை உணர்ந்தான் சீடன்.
--------------------------------------------

"பாரதீயன்-சந்தோஷம்"

No comments: